சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை நஸ்ரியா ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியா, ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொண்டார். தற்போது கூட அவருடைய குறும்புத் தனமும், சுட்டி தனமும் ரசிகர்களின் மனதில் நீங்காமல் உள்ளது. இவர் முதன்முதலாக தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். ஆனால், இவர் நிவின் பௌலியுடன் இணைந்து நடித்த ‘நேரம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக பேசப்பட்டார்.

Advertisement

இதனை தொடர்ந்து ‘ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா, வாயை மூடி பேசவும்’ என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளார் நடிகை நஸ்ரியா. மேலும்,இவர் திரைப்பட நடிகையும் மட்டுமல்லாமல் பின்னணி பாடகி, நிகழ்ச்சி தொகுப்பாளர், விளம்பர அழகி என பன்முகங்களை கொண்டவர். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா அவர்கள் மலையாள மொழியின் முன்னணி இயக்குனரான பாசில் என்பவரின் மகனும் மலையாள மொழியின் நடிகருமான பஹத் பாசிலை 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : டேபிள் மீது ஒரு சின்ன பேப்பர் கட்டிங் இருந்தது-படம் உருவான விதம் குறித்து பேசியுள்ள லோகேஷ் கனகராஜ்.

ஆனால், நேரம் மற்றும் ராஜா ராணி என்ற இரு படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. இருப்பினும் தமிழ் மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்தார் நஸ்ரியா. இறுதியாக தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான திருமணம் எண்ணும் நிக்கா என்ற படத்தில் கூட நடித்திருந்தார். சமீபத்தில் நடிகை நஸ்ரியா குட்டையான ஆடையில் இடுப்பு தெரியும் அளவிற்கு கொஞ்சம் கிளாமராக போஸ் கொடுத்தபடி ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

இதனைக் கண்டு ஷாக்கான பல்வேறு ரசிகர்களில் ஒரு ரசிகர் தமிழ் படத்தில் இடுப்பு தெரிந்ததற்கு என்னவெல்லாம் பிராப்லம் செஞ்சீங்க. இப்போ இது என்ன டிரஸ்? என்று கமன்ட் செய்துள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நடிகை நஸ்ரியா தனுஷுடன் நய்யாண்டி படத்தில் நடித்தபோது இவருக்கே தெரியாமல் இவரை கவர்ச்சியாக காட்டி விட்டார்கள் என்று கூறி படக்குழு மீது குற்றம் சாட்டினார். அப்போது இந்த விஷயம் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement