நாட்டில் எவ்வளவோ பிரச்சனை போய்கொண்டிருந்தலும் பரம ஹம்ச நித்யானதாவின் வாழ்க்கை மட்டும் சந்தோசமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சையில் சிக்கினாலும் இவருக்கென்று கோடிக்கணக்கான பக்தர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

Advertisement

இத்தனை காலம் ஆன்மிக சிந்தனைகளை மாட்டும் தனது பக்தர்களுக்கு அள்ளி வழங்கி வந்த நித்யானந்தா சமீபத்தில் விஞ்ஞான விதிகளையும் கூறியுள்ளார். அறிவியல் உலகில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பல்வேறு சூத்திரங்களை உலகத்திற்கு அளித்துள்ளார். அதில் முக்கிய சூத்திரம் என்றால் E = mc^2 என்ற ஆற்றல் சமன்பாடு மிகவும் முக்கியமான ஒன்று.

இந்நிலையில் நித்யானதா, ஐன்ஸ்டைன் வகுத்த E = mc^2 சமன்பாடு மிகவும் தவறு என்றும் அதில் M என்ற ஆங்கில வார்த்தை MATTER என்பது தொடர்ச்சியான விஷயம் (MATTER IS CONTINUOUS ) என்பது போல ஒரு சொற்பொழிவையாற்றினார். இதனை சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சனம் செய்தனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் நித்யானந்தா கூறியதை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு காலய்த்துள்ள “தமிழ்படம்” இயக்குனர் சி எஸ், நித்யானந்தா கூறியதில் MATTER IS CONTINUOUS என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கிண்டலடித்துள்ளார். இதனை புரிந்துகொண்ட அனைவரும் நித்யானந்தாவை கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement