ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படத்தின் ஹீரோக்கள் இவர்கள் தான்! புகைப்படம் உள்ளே

By Ajju · 19/11/2017
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரைப் போலவே தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது பாகுபாலி இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி தான். பாகுபலியின் இரண்டு பாகங்களும் எடுத்து தற்போது ஓய்வில் இருக்கும் இவருடைய அடுத்த படம் யாருடன், எப்படி இருக்கும் எனக் கேட்கத் துவங்கிவிட்டனர் அனைவரும். இந்நிலையில் தற்போது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் ராஜமௌலி மற்றும் தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் சேர்ந்து செல்லமாக ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதையும் படிங்க: லட்சுமி குறும்படத்தில் இதை உங்களால் உணரமுடிகிறதா ! பார்ப்பவன் கண்ணைப் பொருத்ததாம் அதாவது, அடுத்ததாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்கப்போவதாக தகவல்கள் கூறுகின்றன.
behindtalkies AMP · Quick view
View full