விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்ததது ஆரவ் மற்றும் ஓவியா தான். பிரபல நடிகையான ஓவியா அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ்வுடன் காதலில் விழுந்தார். ஆனால், ஆரவ் மருத்துவ முத்தம் மூலம் ஓவியா மீது காதல் இல்லை என்று கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னும் ஓவியாவால் ஆரவ்வை மறக்க முடியவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர் என்று நினைத்து வந்த நிலையில் ஆரவ் மற்றும் ஓவியா அடிக்கடி ஊர்சுற்றி புகைப்படங்களும் விடீயோக்களும் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது.

இதையும் படியுங்க : புத்தாண்டு அன்று மீண்டும் தங்கள் காதலை உறுதி செய்த ஆரவ்-ஓவியா..! 

Advertisement

போதாத குறைக்கு ஓவியா தனது பிறந்தநாளையும், புத்தாண்டையும் ஆரவ்வுடன் கொண்டாடினார். இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பது உண்மை தான் என்று ரசிகர்கள் முடிவே செய்துவிட்டனர். ஒரு சிலரோ இருவரும் லிவிங் டுகேதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று புலம்பினார்.

இந்நிலையில் இந்த கேள்விகள் அனைத்திற்கும் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார் ஓவியா. இதுகுறித்து பேசிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது எனக்கும் ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. நிறைய சண்டைகள் நடந்தன. ஆனால் இப்போது நாங்கள் சமாதானமாகி விட்டோம். நானும் ஆரவ்வும் திருமணம் முடித்துவிட்டோம், திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம் என்றெல்லாம் வதந்திகள் பரவுகின்றன. அவை அனைத்தும் பொய்.

Advertisement

ஆரவ் எனது நண்பர். எனக்கு ஆதரவாக இருக்கிறார். தவிர எனக்கு திருமணத்தில் நம்பிக்கை கிடையாது. அது வேண்டாமென்று நினைக்கிறேன். ஆனால் வாழ்க்கை எங்கே கொண்டுபோய் சேர்க்கும் என்று எனக்கு தெரியாது. ஒருவரின் துணை வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்து இல்லை. எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் இல்லை என்று தெளிவு படுத்திவிட்டார் ஓவியா.

Advertisement

Advertisement