சினிமா நடிகைகளை எடுத்துக் கொண்டாலே தங்களது வாழ்வில் விரைவில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். அதிலும் குறிப்பாக பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் தங்களது 30 அல்லது 35 வயதில் தான் திருமணம் பற்றியே யோசிப்பார்கள். அந்த வரிசையில் பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு சில தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது.
பாலிவுட் நடிகையோ ப்ரியங்கா சோப்ரா பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந் வருகிறார். மேலும் ஹிந்தி சினிமாவில் நடிப்பது போர் அடித்து விட்டதால் பின்னர் ஹாலிவுட் சினிமாவிற்கு தாவினார் பிரியங்கா. அதன் பின்னர் அங்கேயே சில ஆண்டுகள் செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தல் அசாம் மாநிலத்தில் உள்ள “சுபர்ண பிரபா போர் டோலி என்ற பெண்கள் பள்ளியில்” மாணவிகளுடன் தனது நேரத்தை கழிப்பதர்காக சென்றிருந்தார் பிரியங்கா.அங்கு வருவதற்கு முன்னாள் அவர் விமானத்தில் அமர்த்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா.
மேலும் அந்த அப்புகைப்படத்தில் தனது கையில் பல மாநிலத்தில் பெண்கள் அணியும் தாலி போன்ற ஒரு கயிறை கட்டி இருந்தார் பிரியங்கா. இதனால் இவருக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டது என்று பலரும் கிளப்பி விட “அது வெறும் திருஷ்டிக்காக கட்டியுள்ள கயிறு தான்,எனக்கு எப்போது திருமணம் என்று நான் கண்டிப்பாக தெரிவிக்கிறேன், அதனை நான் கண்டிப்பாக ரகசியமரகிசயமாக வைக்க மாட்டேன் “என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் “