சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சமூக வளைத்ததில் மட்டும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்த விஷயம் சின்மயி, லட்சுமி பிரியா, கனிமொழி எம் பி போன்றவர்களால் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த விவரகத்தில் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்பட்டு இருகிறார் . மேலும், அவர் மீது போஸ்க்கோ உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இப்படி ஒரு நிலையில் நடிகர் நிதின் சத்யா இந்த விவகாரம் குறித்து புதிய சர்ச்சையான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, இந்த வாட்டி இந்த ஸ்கூல்ல செஞ்சிருவாங்க போல தெளிவான ஆதாரம் இருக்கிறது. இந்த முறை காப்பாற்ற ஜெயலலிதா கூட இல்லை. அடேய் ராஜகோபால் தயாராக இருந்துகொள் என்று பதிவிடுட்டுளளர். ராஜகோபால் சர்ச்சைக்கும் ஜெயலலிதாவிற்கும் இந்த பள்ளிக்கும் என்ன தொடர்பு நெட்டிசன்கள் குழம்பியுள்ளனர்.

இதையும் பாருங்க : அட, நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் சம்யுக்தா – இவங்களுக்கும் சம்யுக்தாவிற்கும் இப்படி ஒரு உறவா? வைரலாகும் புகைப்படம்.

Advertisement

கடந்த 2012ஆம் ஆண்டு இதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த ரஞ்சன் என்ற மாணவன் பள்ளியில் இருக்கும் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் பள்ளியில் நீச்சல் பயிற்சியாளரான ராஜசேகர், அருண்குமார், ரவி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் நீச்சல் குளத்தின் இன்சார்ஜ் ரங்காரெட்டி ஆகிய 5 பேரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் பள்ளியில் இருந்த அந்த நீச்சல் குளத்திற்கு ம் சீல் வைத்து அவர்கள் இந்த சம்பவத்தின் போது ஜெயலலிதா இந்த விவகாரத்தில் தலையிட்டு பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றியதாக கூட அப்போது விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தான் நிதின் சத்யா இவ்வாறாக பதிவிட்டு இருக்கிறார் என்பது எட்டி பெண்களின் கருத்தாக இருக்கிறது.

Advertisement
Advertisement