சூர்யா கைய புடிச்சி 'சுக்ரியா பையானு' சொல்லனும், இதுக்கு 10 நாள். வறுத்தெடுத்த மிஸ்கின் பட நடிகை.

By Rajkumar · 16/2/2020

தமிழ் சினிமாவில் என்ற எந்த வித பட்டமும் இல்லாமல் முன்னணி நடிகர்களின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூர்யா . இவரது ஒரு சில படங்கள் தழுவினாலும் பல்வேறு படங்கள் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த காப்பான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சூர்யா, இறுதி சுற்று பட இயக்குனர் சுதா இயக்கத்தில் 'சூரரை போற்று' படத்தில் நடித்து வருகிறார். சம்பத்தில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை விமானத்தில் பயணம் செய்தபடி வெளியிட்டனர்.

இந்த படத்திற்காக சூர்யா செய்த் வரும் ப்ரோமோஷகளால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பொதுவாக சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் ஒரு பிரேமில் வந்துவிட மாட்டோமா என்று துணை நடிகர்கள் பலரும் ஏங்குவார்கள். ஆனால், சூர்யாவின் படத்தில் நடிக்காமல் போனதை எண்ணி சந்தோசபட்டதாக சைக்கோ படத்தில் ரிச்சல் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ப்ரீத்தம் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : காதலர் தினத்தன்று காதலை உறுதி செய்த முகென். அபிராமியோட கமெண்டை பாருங்க.

சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான படம் “சைக்கோ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் ரேச்சல் எனும் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ப்ரீத்தம். இந்த படத்தில் நடித்த வில்லனுக்கு இணையாக கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

வீடியோவில் 15: 20 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=H2l3aAXCrOQ

40 வருடங்களுக்கு மேலாக நாடகத்துறையில் இருந்து வரும் இவர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு குழுவில் நாடகங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சைக்கோ தான் இவருக்கு முதல் படமே. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ப்ரீதமிடன் 'சைக்கோ படத்திற்கு முன்பாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததா என்று கேட்கப்பட்டடது. அதற்கு பதில் அளித்த அவர், யுவா அதாவது ஆயுத எழுத்து படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடிக்க 10 நாள் புதுக்கோட்டையில் வேண்டும் என்றார்கள். ஆனால், அப்போது எனக்கு நேரம் இல்லை. படம் வந்த பின்னர் நான் நடிக்க இருந்த கேரக்டருக்கு ஒரே ஒரு லைன் தான் 'சூர்யா கைய புடிச்சி சுக்ரியா பையா'னு சொல்லணும் அவ்ளோதா. இதுக்காக நான் புதுக்கோட்டையில் போய் 10 நாள் இல்லாமல் இருந்தேன் என்பது எனக்கு சந்தோசமாக இருந்தது.

behindtalkies AMP · Quick view
View full