காதலர் தினத்தன்று காதலை உறுதி செய்த முகென். அபிராமியோட கமெண்டை பாருங்க.

0
112983
mugen
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகென் ராவ். இந்த சீசனில் காதல் காவியங்கள் கொடிகட்டி பறந்தது. அதில் முதன் முதலில் அபிராமி தான் காதலை தொடங்கி வைத்தவர். அபிராமி முதலில் கவினின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால்,கவின் கொஞ்சம் கூட அபிராமியை கண்டுகொள்ளவில்லை. பின்னர் கவினை கடுப்பு ஏற்றுவதற்காக தான் முகென் உடன் பழகினார். முதலில் நண்பனாக பழகினார் அபிராமி. பின் அவர் மீது அதுவே காதலாக மாறிவிட்டது.

-விளம்பரம்-

நாட்கள் செல்ல செல்ல முகென் மீது வைத்திருந்த அன்பு, பாசம் அனைத்தும் காதலாக மாறிவிட்டது என்று அவர் கூறியிருந்தார். அது மட்டும் இல்லைங்க கமலஹாசன் அவர்கள் போட்டியின்போது ஹீரோ யார்? வில்லன் யார் ?என்ற டாஸ்க் வைத்திருந்தார், அதில் அபிராமி கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னுடைய ஹீரோ முகென் தான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். இதிலிருந்து அவர் அந்த அளவிற்கு முகென் மீது பைத்தியமாக காதல் செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து சக போட்டியாளர்களும் முகென் இடம் பேசினார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : டயட் இருந்தேன், அண்ண வேணா சொல்லிட்டாரு. மேடையில் மனம் நெழிந்த ரோபோ ஷங்கர் மனைவி.

ஆனால், முகென் ஏற்கனவே அபிராமிடம் நண்பனாக தான் பழகுகிறேன் என்று கூறினார். மேலும்,அபிராமி தன்னிடம் பழகுவது குறித்து முகென் கூறியது, நான் ஏற்கனவே நதியா என்ற பெண்ணை காதலித்து வருகிறேன். ஆனால், அப்போதும் அபிராமி, முகெனை விடுவதாக இல்லை. மேலும் ,பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் எங்கள் காதல் குறித்து பேசுவோம். அதுமட்டுமில்லாமல் எங்கள் வாழ்க்கை குறித்தும் நாங்கள் இருவரும் பேசி உள்ளோம் என்று கூறினார். இவ்வளவு பொறுமையாக முகென் எடுத்துச் சொல்லியும் அபிராமி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியேறும் வரை தீவிரமாக முகெனை காதலித்துக் கொண்டுதான் இருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு முகென், சிந்தியாவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு தனது காதலை உறுதி செய்தார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்தி கமன்ட் செய்தனர். அதில் ரசிகர் ஒருவர், இதை பார்த்தா அபிராமி கண்டிப்பா அழுவாங்க’ என்று கமன்ட் செய்து இருந்தார். இந்த கமெண்ட்டிற்கு பதில் அளித்த அபிராமி, கண்டிப்பாக மாட்டேன். அவனை நினைத்து எனக்கு சந்தோசம் தான். உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் அபிராமி.

Advertisement