போட்டோ போட்டால் கலாய்க்காமல் இருக்க ஆல்யா மானஸா செய்த ஐடியா.! உஷாரா இருக்காங்க.!

By Rajkumar · 15/5/2019

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை ஆலியா மானசா. ஆரம்பத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார் ஆல்யா மானஸா.

https://www.instagram.com/p/BxeQuhSF_pD/

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இவருக்குமான சென்ற நடனஇயக்குனர் மானஸ் என்பவருடன் காதல் மலர்ந்தது. சில ஆண்டுகள் நீடித்த இவர்களது காதல் கடந்த ஆண்டு பிரேக்கப்பில் முடிந்தது. அதன் பின்னர் இவருடன் ராஜா ராணி தொடரில் நடித்து வரும் சஞ்சீவுடன் காதலில் விழுந்தார் மானஸா.

இதையும் படியுங்க : பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று போட்டியாளர்கள் இவர்கள் தான்.! இந்த ஒருதர் செம.

இவர்கள் இருவருக்கும் விஜய் டிவியே பிரமாண்டமாக நிச்சயதார்த்தத்தை கூட ஏற்பாடு செய்திருந்தனர். ராஜா ராணி தொடருக்கு கிடைத்த ஆதரவால் தற்போது இந்த நிகழ்ச்சியை சிங்கப்பூரில் எடுத்து வருகின்றனர். மேலும் ஆலியா மானசா அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு எழுதும் வழக்கம். அவ்வாறு பதிவிடும் போது சிலர் அதனை பங்கமாக கலாய்த்து விடுகின்றனர்.

சமீபத்தில் ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆனால், அந்தப் புகைப்படத்திற்கு எந்த ஒரு கமெண்ட்டும் இல்லை, என்ன என்று ஆராய்ந்தபோது தனது புகைப்படத்திற்கு யாரும் செய்யாத வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாற்றியுள்ளார் ஆலியா மானசா. இதன் மூலம் ரசிகர்களின் கிண்டலிலில் இருந்து தப்பித்து விட்டதாக எண்ணி உள்ளார் ஆல்யா மானஸா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full