இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பேச்சுக்கள் பல நாட்களாக அடிபட்டு வரும் நிலையில் இன்னும் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணமே ரஜினியின் சம்பள பிரச்சனை தானாம். 2.0 படத்திற்கு பின்னர் ரஜினியின் மார்க்கெட் எங்கேயோ போவிட்டது. இதனால் தனது சம்பளத்தை பல மடங்காக உயர்த்தியுள்ளார் ரஜினி. இதனால் முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினி கேட்ட சம்பளத்தை எண்ணி குழப்பத்தில் இருக்கிறது லைகா நிறுவனம்.

இதையும் படியுங்க : 27 வருடங்களுக்கு பின் மீண்டும் இப்படி ஒரு ரோலில் ரஜினி.!எக்ஸ்க்லுசிவ் அப்டேட்.! 

Advertisement

இதற்கு முக்கிய காரணமே தற்போது அஜித் போனி கபூர் தயாரிப்பில் நடித்து வரும் படத்திற்கு 50 கோடி சம்பளம் தான் பேசியுள்ளார். மேலும், அதே சம்பளத்தில் போனி கபூருடன் அடுத்த படத்திளும் இதே சம்பளத்தில் சம்பளத்தில் கமிட் ஆகியுள்ளார் அஜித். எனவே அஜித் வாங்கும் அதே சம்பளத்தில் தானும் நடிப்பதா என்ற தயக்கம் தான் ரஜினியை அடுத்த படத்துக்கு நகரவிடாமல் நிறுத்திவைத்திருக்கிறது

Advertisement