தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் சிம்ரன். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடுப்பழகி என்ற பட்டத்தையும் பெற்றவர். அந்த அளவிற்கு இவர் தன் நடனத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்தார். அது மட்டும் இலலாமல்சினிமா திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சிம்ரனின் பார்த்தேன் ரசித்தேன் படம் குறித்து தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. அப்படி என்ன தான் அந்த படத்தில் நடந்தது என்று பார்க்கலாமா!!! சினிமா துறையில் பல மாஸ் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் சரண். சொல்லப்போனால் இவர் இயக்கிய ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் தான் அஜித்தின் வாழ்க்கையே மாறியது என்று கூட சொல்லலாம். தல அஜித் அவர்கள் இந்த அளவிற்கு புகழின் உச்சத்திற்கு செல்வதற்கு காரணமானவர்களில் ஒருவர் இயக்குனர் சரண் என்றும் சொல்லலாம்.

இதனை தொடர்ந்து சரணின் ‘அமர்க்களம்’ படமும் அஜித்தின் திரை பயணத்தையே மாற்றியது என்று கூட சொல்லலாம். ஏன்னா! அந்த அளவுக்கு தமிழ் சினிமாவுக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சரண். அதேபோல் சிம்ரனின் வாழ்க்கையை மாற்றியவரும் இயக்குனர் சரண் தான். மேலும், சரண் இயக்கிய “பார்த்தேன் ரசித்தேன்” படம் செம ஹிட் கொடுத்த படம் ஆகும். 2000 ஆண்டு திரையரங்கு வெளிவந்த ‘பார்த்தேன் ரசித்தேன்’ படம் மக்களிடையே அதிக வரவேற்பையும்,நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது என்று கூட சொல்லலாம். இந்த படத்தை எஸ். திருவேங்கடம் என்பவர் தயாரித்திருந்தார்.

இதையும் பாருங்க : வைரலாகும் சாக்க்ஷியின் வீடியோ.. கடைசில இவங்களையும் இப்படி மாத்திட்டாங்களே..

Advertisement

இந்த படத்திற்கு பரத்வாஜ் அவர்கள் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பிரசாந்த், சிம்ரன், லைலா, சார்லி, தாமு, ரகுவரன்,வினுசக்கரவர்தி,வையாபுரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்நடித்திருந்தனர். இந்த படத்தில் சிம்ரன் அவர்கள் முதன் முறையாக நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லியாக நடித்தாலும் அவர் ரசிகர்களின் மனதில் கதாநாயகியாக இருந்தார். சமீபத்தில் சரண் அவர்கள் பார்த்தேன் ரசித்தேன் படம் குறித்து பேட்டி அளித்து உள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியது,பார்த்தேன் ரசித்தேன் படத்தில் முதலில் சிம்ரன் கதாபாத்திரத்துக்கு கதை சொல்லி நடிகை ரம்பாவை தான் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக இருந்தது.

ஆனால், ரம்பா அவர்கள் அந்த படத்தில் ஹீரோயினுக்கு ரெண்டு டூயட் இருக்கிறது. எனக்கு இல்லை என்று கூறி நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். மேலும், வில்லியாக நடிக்க எனக்கு கஷ்டமாக இருக்கு என்றும், நான் வில்லியாக நடிக்க மாட்டேன் என்றும் கூறினார். அப்போ சிம்ரன் இடத்தில் ரம்பா இருந்திருந்தா எப்படி இருக்கும் என ரசிகர்கள் யூகித்துக் கொண்டு வருகிறார்கள் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். நடிகை ரம்பா ஒரு அழகான தேவதை, இளையனர்களின் கனவு கன்னி என்று ரசிகர்கள் கூறுவார்கள். ஆனால், அவரை வில்லியாக ஏற்றுக்கொள்ளவது கொஞ்சம் கஷ்டம் தான்.

Advertisement
Advertisement