நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர்.அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு தமிழ், மலையாள, தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் மாரி 2 படத்தில் இவர் செம ஆட்டம் போட்ட ரவுடி பேபி பாடல் இணையத்தில் படு வைரலாக பரவியது.

நடிகை சாய் பல்லவி 2008-ல் தாம்தூம் என்ற படத்தில் கங்கனா ரணாவத் தோழியாக நடித்திருந்தார் அதன் பின்னர் தனது பெற்றோர் விருப்பபடி மருத்துவ படிப்பை வெற்றிகரமாக முடித்தார். பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், சினிமாவில் நடிக்க துவங்கியதும் தம்மால் சினிமா மற்றும் டாக்டர் தொழிலை ஒரேய நேரத்தில் பார்க்க முடியாது என்று கூறி தனது பெயருக்கு பின்னால் டாக்டர் பட்டத்தை கூட போட்டுக் கொள்ளவில்லை சாய் பல்லவி.

இதையும் படியுங்க : கர்ப்பமாக இருக்கும் நிலையில் உள்ளாடை தெரியும் ஆடையில் சென்ற சமீரா.! 

Advertisement

சாய் பல்லவி ப்ளஸ் என்றால் அவரது சிவந்த கண்ணம் தான். மேக்கப் போடாமலேயே கன்னம் இளஞ்சிவப்பாக இருப்பதும், சிரிக்கும்போது கன்னம், மேலும், சிவப்பாவதும் தான், நடிகை சாய் பல்லவியைப் பிரபலப்படுத்தியது. கன்னம் தானாக சிவப்பாவதற்குக் காரணம் ஒரு விநோதமான தோல் குறைபாடு.

அந்தக் குறைபாட்டின் பெயர் ‘ரோஸாஸியா’. கன்னத்தின் அடியில் இருக்கும் ரத்தநாளங்கள்  விரிவடையும் போது, அந்த இடத்தில் மட்டும் சிவப்பு நிறம் கூடுதலாக, தெரியும். அதனால், முகத்தசை, கன்னங்கள், மூக்கு பகுதியில் இந்த  சிவப்பு நிறம் பளிச்சென்று தெரிகிறது. சாய் பல்லவியின் கன்னம், தானாகவே சிவந்தாலும், அது ரசிகர்களை ஈர்த்துள்ளது.

Advertisement
Advertisement