தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான “இறுதி சுற்று” படத்தில் கதாநாயகியை நடித்தவர் நடிகை ரித்திகா சிங். அந்த படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுகு என்று ஒரு சில படங்களில் நடித்த இவர், தற்போது தனது உடலை மெருகேற்றிக்கொண்டு வருகிறார்.

23 வயதாகும் நடிகை ரித்திகா சிங் ஏற்கனவே மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். மேலும் அதில் இதுவரை ஒரேஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளார். ஒரு விமான பயணத்தின் போது தான் இயக்குனர் சுதா இவரைக்கண்டு நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார்.

இதையும் படியுங்க : பள்ளிப்பருவ பெண்ணாக இருந்த கௌரி.! இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க.!

Advertisement

இறுதி சுற்று படத்திற்கு பின்னர் தமிழில், விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்தார். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை படங்களில் கூட கவர்ச்சி காண்பிக்காத ரித்திகா, சமீபத்தில் படு கவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலர் விரும்பி வந்தாலும், ஒரு சிலரோ உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று ஷாக்கடைந்து வருகின்றனர்.

Advertisement
Advertisement