திருப்பாச்சி நடிகையால் தன் வாழ்க்கை மற்றும் மனைவியை இழந்த இயக்குனர் பேரரசு !

By Ajju · 24/11/2017
பல முன்னனி நடிகர்களை வைத்து அவரது சமயத்தில் அடுத்தடுத்து கிராமத்து மாஸ் மசாலா படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் பேரரசு. 2005ல் விஜயை வைத்து திருப்ப்பாச்சி சிவகாசி என இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் இவர். இவர் சினிமாவில் இயக்குனராக வருவதற்கு முன்னரே தனது திருமண வாழ்க்கையை துவங்கியவர் தற்போது அவரது அந்த திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருந்து வருகிறார். திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் ரீஜா ஜான்சன். பொதுவாக படத்திற்காக மல்லிகா என அழைக்கப்படுவார். இந்த படத்தை இயக்கிய போது பேரரசுக்கும் விஜய் தங்கையாக நடித்த ரீஜா ஜான்சனுக்கும் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கிப் பழகியதை அறிந்த இவரது மனைவி சங்கடப்பட்டுள்ளார். இதையும் படிங்க: எவ்ளோ கோடி கொடுத்தாலும் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் ? இனியா ஓப்பன் டாக் ! இந்த பழக்கம் பேரரசு, ரீஜாவின் வீட்டில் தங்கும் அள்விற்கு சென்றுவிட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விவாகரத்து கோரி விண்ணப்பம் செய்துள்ளார் பேரரசுவின் மனைவி. பின்னர் இதனை விசாரித்த நீதிமன்றம் விவாகரத்தை வழங்கியும், பேரரசுவின் மனைவிக்கு மாதம் ₹.15000 ஜீவனாம்சன் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்போதைய ட்ரெண்டிற்கு பேரரசு அடாப்ட் ஆகி இருந்தால் இன்நேரம்சங்கர், முருகதாஸ் வரிசையில் இருப்பார் பேரரசு. சில தேவையில்லாத பழக்கத்தால் மன உழைச்சல் அடைந்து தற்போது சரியான கதையைக் கூட யோசிக்க முடியாத அளவிற்கு இருக்கிறார் அவர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full