விவாகரத்து குறித்து முதல்முறையாக சமந்தா கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். பின் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

இதையும் பாருங்க : விபத்தில் இறந்த கணவர், வாழ்வாதத்திற்கு செருக்கு தைத்து வரும் விஜய், ரஜினி பட நடிகை – நிஜத்தில் ஒரு இந்தியன் மனோரம்மா. மனதை உருக்கும் வீடியோ.

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், இருவரும் விவாகரத்து குறித்த காரணத்தை தெரிவிக்கவே இல்லை. இருந்தாலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார்.

Advertisement

சமந்தா நடித்த படங்கள்:

அதனை தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படத்திலும் குத்தாட்டம் போட இருக்கிறார். பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்தார். இந்த படத்தில் கதிஜா பாத்திரத்தில் நடித்த சமந்தாவுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இவருடன் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்து இருந்தார்கள். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

Advertisement

சமந்தா நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து இவர் சாகுந்தலம், யசோதா, திரில்லர் கதை சமந்தா கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமந்தா அவர்கள் தன்னுடைய விவாகரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்து கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்தியில் பிரபலமான காபி வித் கரன் நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்று இருந்தார். அதன் ப்ரொமோ தான் தற்போது வெளிவந்திருக்கிறது.

விவாகரத்து குறித்து சமந்தா சொன்னது:

அதில் சமந்தா அவர்கள் தன்னுடைய விவாகரத்து குறித்து கூறியிருப்பது, திருமண வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் போக காரணம் வாழ்க்கை K3G (கபி குஷி கபி கம்) படம் போல இருக்கும் என காட்டினார்கள். ஆனால், உண்மையில் அது கேஜிஎப் போல இருக்கிறது எனக் கூறி இருக்கிறார். இதன் மூலம் சமந்தா அவருடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து இருப்பதைப் பற்றி தான் இப்படி மறைமுகமாக பேசி இருக்கிறார் என தெரிகிறது. சமந்தாவின் இந்த பதிலால் நாக சைதன்யாவின் ரசிகர்கள் பலர் சமந்தாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement