தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சந்தீப் கிஷான். இவர் ஏற்கனவே ‘யாருடா மகேஷ்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே முன்பாகவேய தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுவரை தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் சந்தீப். சமீபத்தில் இவர் விஜய்யின் சுறா படத்தை பார்த்துவிட்டு போட்ட ட்வீட் விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது.

விஜய் ஒரு காலத்தில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து இருந்தார். அதில் சுறா திரைப்படம் விஜய்க்கு மாபெரும் தோல்விப்படமாக அமைந்தது.2010-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தினை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார். இதில் ‘தளபதி’ விஜய்-க்கு ஜோடியாக பிரபல நடிகை தமன்னா நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, தேவ் கில், ரியாஸ் கான், ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருந்தனர். ‘தளபதி’ விஜய்யின் திரை உலக வாழ்வில் ‘சுறா’ திரைப்படம் அவருக்கு 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களை எரிக்க வந்திருக்கிறேன் – காளி கெட்டப்பில் வனிதா வெளியிட்ட புகைப்படம்.

Advertisement

ஆனால், இந்த படம் மாபெரும் தோல்வியடைந்து. இப்படி நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு ட்வீட் போட்டுள்ள சந்தீப், சுறா படத்தை பார்த்தேன் ஐதராபாத் விட இது மிகப் பெரிய டார்ச்சர் இந்த படத்தின் கதையை கேட்ட போதும் விஜய்க்கும் அப்படித்தான் இருந்திருக்கும்சந்தோஷ் கிஷனின் இந்த டீவீட்டை பார்த்த பலர் 10 வருடம் கழித்து இந்த படத்தை பார்த்துவிட்டு ட்வீட் செய்வது என்ன அவசியம் என்று கூறி வருகின்றனர். ஆனால், இந்த டீவீட்டை உடனடியாக நீக்கிவிட்டார் சந்தீப் கிஷன்.

இருப்பினும் இவரது ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ விஜய் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்தனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சந்தீப், இதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை.. ஆனால் என்னுடைய வார்த்தைகளை நான் மறுபரிசீலனை செய்ய ஒரு சில கணங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.இந்தப் பதிவை எடுத்து வைத்துக் கொண்டு என்னிடம் எப்போது வேண்டுமானால் கேளுங்கள். அப்போதும் நான் இந்த கருத்தில் தான் உறுதியாக இருப்பேன்.

Advertisement

எனக்கு விஜய் சாரை மிகவும் பிடிக்கும். அவர் பல கடினமான தருணங்களில் என்னை பலவழிகளில் ஊக்கப்படுத்தியுள்ளார். இதில் வெட்கப்பட ஏதுமில்லை. விஜய் சார் படங்களை ரசித்தே நான் வளர்ந்தேன். இடைப்பட்ட காலங்களில் ஒரு வழக்கமான சினிமா ரசிகனாக தொலைந்து போனேன். ஆனால் இன்று கடந்த 10 ஆண்டுகளாக அவருடைய பயணம் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது என்று பெருமையுடன் சொல்வேன். இன்று நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement