90களில் நல்ல திறமையுடன் நன்றாக நடித்த மலையாள ஹீரோயின்களில் இவரும் ஒருவர். அதன் பின்னர் ஆளே காணாமல் போனவர். இவருடைய தந்தை மாதவன் நாயரின் பூர்வீகம் கேரளம் தான்.
முதன் முதலாக ஹீரோயினாக ‘எல்லாமே என் ராசா தான்’ என்ற படத்தில் ராஜ் கிரண் இயக்கத்தில் நடித்தார். ஆனால், அவருக்கு என ஒரு நல்ல பெயரை கொடுத்தது விஜயின் பூவே உனக்காக படம்தான். தனது சுட்டித்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் அப்போது. அதன் பின்னர் பல படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தது.
அதே போல், பின்னர் ஒளிப்பதிவாளர் சரவணன், சிம்பு நடித்த சிம்பாட்டம் படத்தில் இயக்குனராக மாறினார். அதன் பின்னர், எந்த ஒரு படத்திலும் நடிக்காத சங்கீதா தற்போது ஒரு பெண் குழந்தையுடன் வீட்டை கவனித்துக்கொண்டு பொறுப்புடன் இருக்கிறார்.