தமிழ் சினிமாவில் இருந்து காணமல் போன நடிகை சங்கீதா இப்போ என்ன பண்றாங்க தெரியுமா

0
6731
- Advertisement -

90களில் நல்ல திறமையுடன் நன்றாக நடித்த மலையாள ஹீரோயின்களில் இவரும் ஒருவர். அதன் பின்னர் ஆளே காணாமல் போனவர். இவருடைய தந்தை மாதவன் நாயரின் பூர்வீகம் கேரளம் தான்.
அவருடைய பிஸ்னசுக்காக சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார். அப்போது அவருக்கு 1974ஆம் ஆண்டு பிறந்தவர் தான் சங்கீதா. 1978லேயே சிநேகிதம் ஒரு பெண்ணோ என்ற ஒரு மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சங்கீதா. இரத்தத்தின் இரத்தமே என்ற ஒரு தமிழ் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

முதன் முதலாக ஹீரோயினாக ‘எல்லாமே என் ராசா தான்’ என்ற படத்தில் ராஜ் கிரண் இயக்கத்தில் நடித்தார். ஆனால், அவருக்கு என ஒரு நல்ல பெயரை கொடுத்தது விஜயின் பூவே உனக்காக படம்தான். தனது சுட்டித்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் அப்போது. அதன் பின்னர் பல படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தது.
அதன் பிறகு சக்கை போடு போட்டு கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தார். கடையசியாக 2003ல் மேரி ஆல்பர்ட் என்கிற படத்தில் நடித்துவிட்டு ஒளிப்பதிவாளர் சரவணன் உடன் திருமணம் செய்துகொண்டார்.

- Advertisement -

அதே போல், பின்னர் ஒளிப்பதிவாளர் சரவணன், சிம்பு நடித்த சிம்பாட்டம் படத்தில் இயக்குனராக மாறினார். அதன் பின்னர், எந்த ஒரு படத்திலும் நடிக்காத சங்கீதா தற்போது ஒரு பெண் குழந்தையுடன் வீட்டை கவனித்துக்கொண்டு பொறுப்புடன் இருக்கிறார்.

Advertisement