தமிழ் சினிமாவில் 43 வயதை கடந்த பின்பும் இன்றும் பிட்டகா ஒரு இளைஞர் போல தோற்றமுடியவர் தான் இளைய தளபதி விஜய் .அதனால் தான் இந்த தலைமுறையிலும் சிறியவர் முதல் பெரியவர் வரை இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர் மிகவும் அதிகம். படங்களில் கலகலப்பாக இருக்கும் விஜய் நிஜத்தில் ஒரு அமைதியான பேர்வழி என்று தான் அனைவரும் நினைத்து வருகின்றனர்.
பல நடிகர் நடிகைகள் கூட விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் அமைதியாக இருப்பார் யாரிடமும் பேசமாட்டார். ஆனால்,டேக் என்று சொன்னவுடன் அவர் அப்படியே மாறி நடிப்பை தெரிக்கவிடுவர் என்று பலர் கூறியிருக்கிறார்கள். மேலும் பல நடிகைகள் விஜயுடன் நடிப்பது மிகவும் சௌகரியமாக இருக்கும் என்றும் கூறி இருக்கின்றனர்.
ஆனால் உண்மையில் நடிகர் விஜய் அமைதியான மனிதர் இல்லை. அவர் நன்றாக பேசுவார் ,குறும்புத்தனமும் செய்வர் நன்றாக பழகினால் அவரிடம் நீங்கள் குழந்தை தன்மையை பார்க்கலாம், அவர் பயங்கரமாக கலாய்ப்பார் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இசையமைபாளர் சந்தோஷ் நாராயணன், இந்த காலத்து இளஞர்களின் பேவரைட் இசையமைப்பாளர் என்று கூட சொல்லலாம். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சந்தோஷ் நாராயணன் விஜய்யை பற்றி பேசுகையில்’நடிகர் விஜய்யிடம் எல்லோரையும் அரவணைக்கும் ஒரு நல்ல குணம் இருக்கிறது. அது அவர் பிரபலமாக இருப்பதால் அல்ல, அந்த குணம் அவருக்கு இயல்பாகவே வந்திருக்க வேண்டும். மேலும் அவர் சமூக வலைத்தளங்களில் கிங் ஆகி வந்துகொண்டிருக்கிறார் ‘ என்று விஜயை புகழ்ந்துள்ளார்.