செங்கோட்டை பட இயக்குனர் சி.வி. சசிகுமார் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்துள்ளார். இவருடைய இறப்பு செய்தி தற்போது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1996 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த படம் செங்கோட்டை. இந்த படத்தை சி.வி. சசிகுமார் தான் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம்.

இந்த படத்தில் அர்ஜுன், மீனா, ரம்பா, விஜயகுமார், வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை ஆர்பி சவுத்ரி தயாரித்து இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. மேலும், இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சி.வி. சசிகுமார் சினிமாவில் அடுத்த பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் தன்னுடைய நண்பர் நட்பு வட்டாரத்தில் நிறைய பேருக்கு கதை, திரைக்கதை எழுதி தந்து இருந்தார்.

இதையும் பாருங்க : சூர்யா நடமாட முடியாது, அவனை தாக்குவதற்கு தயாராக இருக்கிறோம் – பாமக பிரமுகர் சர்ச்சை அறிவிப்பு. வைரலாகும் வீடியோ.

Advertisement

பின்னர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியான மகாபாரதம் தொடரில் ஒரு சில எபிசோடுகளையும் இவர் இயக்கி இருந்தார். மேலும், சில வருடங்களுக்கு இவர் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார். பின் சமீபத்தில் போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில் கேன்சருக்காக சிகிச்சை பெற்று வந்திருந்தார். ஆனால், நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்து மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் சி.வி. சசிகுமார் அவர்கள் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட காரணமாக உயிரிழந்துள்ளார்.

தற்போது இவருக்கு 57 வயது தான் ஆகிறது. இவருடைய மரணச்செய்தி திரையுலகில் பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும், இயக்குனர் இறுதிச்சடங்கு இன்று நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது. இவருடைய இறப்பிற்கு பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவருடைய இறப்பு செய்தி குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement