தமிழில் பல சீரியலில் நடித்த நடிகை சந்திரா தனது 38 வயதில் திருமணத்தை முடித்து உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சந்திரா லக்ஷ்மன். இவர் தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் ‘மனசெல்லாம்’ படத்தில் ஸ்ரீகாந்திற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தார்.

திரைப்படங்களை விட இவருக்கு மிகவும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது தொலைக்காட்சி தொடர்கள் தான். சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் தனது பயணத்தை தொலைக்காட்சி சீரியல் பக்கம் தொடர்ந்தார். இதுவரை தமிழில் கோலங்கள், காதலிக்க நேரமில்லை, துளசி பாசமலர் போன்ற பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : அச்சு அசலாக கல்யாணியை சிறு வயதில் பார்த்தது போல இருக்கும் அவரின் மகள் – வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

Advertisement

மேலும் மலையாளத்திலும் பல தொடர்களில் நடித்துள்ளார் சந்திரிகா. இறுதியாக தமிழில் தில்லாலங்கடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இருப்பினும் மலையாள தொடர்களில் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் தனது சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.

சந்திரா ‘ஸ்வந்தம் சுஜாதா’ என்ற மலையாள தொடரில் நடித்து வந்தார். இதே தொடரில் டோஷ் க்றிஸ்டியும் நடித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னுடைய திருமணம் குறித்து அறிவித்து இருந்த சந்திரா, தற்போது தனது 38 வது வயதில் திருமணத்தை முடித்துள்ளார். மேலும், திருமணத்தில் மணமக்கள் இருவரும் மாறி மாறி முத்த மழையை பொழிந்துள்ளனர்.

Advertisement
Advertisement