கடந்த சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய நாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்வேதா பாசு. இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்குஅறிமுகமானார். இவர் அதிகம் இந்தித் திரைப் படங்களிலும், ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களிலும் தான் நடித்து உள்ளார். இவர் பெங்காலி, தமிழ், கன்னடம்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் உதயா, கருணா நடித்த சந்தமாமா, ஒரு முத்தம் ஒரு யுத்தம் உள்ளிட்ட சில படங்களில் தான் நடித்து உள்ளார்.

பின் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். ஹிந்தியில் இவர் நடித்த Makdee என்ற படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்காக இவர் தேசிய விருது கூட வாங்கி இருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்து. இதனால் இவர் 2014ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால் போலீசார் நடிகை ஸ்வேதா பாசுவை கைது செய்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே.

Advertisement

இதையும் பாருங்க : எவ்ளோ காஸ் கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன். பிரியா ஆனந்திற்கு குவியும் பாராட்டு.

பின் ஸ்வேதா பாசு வெளி வந்தவுடன் எனக்கு பணத் தேவை இருந்ததால் தான் வேறு வழியின்றி விபச்சாரத்திற்கு ஒப்புக் கொண்டதாக இவர் வெளிப்படையாகவே கூறி இருந்தார். பாலிவுட் பட இயக்குனரும், நெருங்கிய நண்பருமான ரோஹித் மிட்டல் என்பவரை நடிகை ஸ்வேதா பாசு காதலித்து வந்தார். பின் இவர்கள் காதல் குறித்து தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தார்கள். இவர்கள் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி திருமணமும் நடைபெற்றது.

Advertisement

இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் கூட முழுமையாக ஆகவில்லை. ஆனால், சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக நடிகை ஸ்வேதா பாசு தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். அதுவும் தனது பிறந்தநாளுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக கணவரை விகாரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி தனது பிறந்தநாளில் சில பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Advertisement

Advertisement