தமிழ் சினிமா உலகில் சர்ச்சை நாயகன் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சிம்பு தான். அந்த அளவிற்கு அவரை குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் வலம் வரும். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் மாநாடு படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மேலும், ரொம்ப காலமாகவே ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த மாநாடு படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இடையில் சிம்பு உடல் எடை கூடி படு குண்டாக மாறி இருந்தார். பின்னர் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு படு ஸ்லிம் தோற்றத்திற்கு மாறினார்.

இதையும் பாருங்க : அன்னிக்கி அப்படி சொன்னீங்க இப்போ இது என்ன ? சமந்தாவின் பழைய டீவீட்டில் தற்போது கழுவி ஊற்றும் ரசிகர்கள்

Advertisement

மாநாடு படத்தில் இவரது பிட்னஸ்ஸை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள். இந்த நிலையில், இன்று காய்ச்சல் காரணமாக சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பரவி ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஏற்கனவே நடிகர் சிம்பு, கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement