தன் ரசிகனுக்காக தெருவில் சிம்பு செய்த வேலை..! கண்கலங்கிய ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே.!

By Ajju · 19/5/2018
என்ன தான் சிம்புவை பற்றி பல விமர்சங்கள் வந்தாலும். அவர் ஒரு நல்ல மனிதர் அதனால் தான் நாங்கள் அவரின் ரசிகர்களாக இருக்கிரோம் என்று அவரது ரசிகர்கள் கூறிவருகின்றன. சில ஆண்டுகளாக சிம்பு மீது பல்வேறு தரப்பினர் குறை கூறி வந்த நிலையில், சிம்புவின் சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லமால் இருந்தார். [embed]https://twitter.com/sathishstr4/status/997720513534283776[/embed] சமீப காலமாக எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் சிம்பு தனது ரசிகர்களை பற்றி தான் பெருமையாக பேசி வருகிறார். மேலும் தான் பாட வாய்ப்புகள் இல்லாமல் வெட்டியாக இருந்த போது தனுக்கு ஆதரவாக இருந்தது ரசிகர்கள் மட்டும் தான் என்று சிம்பு அடிக்கடி கூறிவருகிறார். தனது ரசிகர்கள் மீது எந்த அளவிற்கு அன்பு கொண்டுள்ளார் என்று வாய் வார்த்தை வழியாக கூறிவந்த சிம்பு , சமீபத்தில் செய்த காரியம் ஒன்று அவரது ரசிகர்களை மிகுந்த பெருமையில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் தனது ரசிகர் ஒருவரின் இரங்கல் போஸ்ட்டரை தானே ஒட்டி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சமீபத்தில் சிம்பு ரசிகர் மதன் என்பவர் காலமாகியுள்ளார் , இந்த தகவலை கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்த சிம்பு இறந்து போன தனது ரசிகருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தானே வீதியில் உள்ள சுவர்களில் ஓடியுள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்க வெளியிட்டு , சிம்புவின் இந்த நல்ல உள்ளதைக் கண்டு நெகிழ்ந்து வருகின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full