கடந்த வாரம் முழுக்க தமிழ் சினிமாவில் இரண்டு பிரச்சனைகள் பற்றி தான் பேச்சு. ஒன்று அன்புச்செழியன் கந்து வட்டி பிரச்சனை மற்றொன்று சிம்புவின் பாத்ரூம் டப்பிங் பிரச்சனை. அன்பானவன் அசராதவன் அடங்காதாவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்புவின் மீது அடுக்கடுக்காக புகார்களை அடுக்கினார். மேலும், பல மீடியாக்களிலும் சென்று சிம்பு படத்திற்கு செய்த தொல்லைகள் குறித்து பேசினார். அதில் முக்கியனானது, சிம்பு பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசி கொடுத்தார் என்பது. இதனை சிம்புவிற்கு எந்த தமிழ் சினிமா நடவடிக்கையில் ஈடுபடுவோம் தடை செய்யப்பட்டு ரெட் கார்டு போடப்பட்டது.
மேலும், இது குறித்து பேசிய சிம்பு:
மைக்கேல் ராயப்பன் யார் தூண்டுதலில் இப்படி பேசுகிறார் எனத் தெரியும். படம் வெளியாகி 6 மாதம் கழித்து இப்படி என்னை இழிவுபடுத்துவதான் நோக்கம் என்ன.? அப்படியே இது குறித்து பேசினாலும், சங்கத்தில் வைத்து முறையாக பேசி முடித்திருக்கலாம். ஆனால், நேரடியாக ஊடங்களுக்கு பேட்டி கொடுப்பதன் நோக்கம் என்ன?
அதுவும் பாத்ரூமில் இருந்து யாராவது டப்பிங் செய்து கொடுப்பார்களா? இதை மட்டும் என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை
என தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சிம்பு.