விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, சீரியல். மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் மனோஜ் பர்னிச்சர் கடைக்கு ஓனர் ஆகிறார். பின் வீட்டில் ரூம் ப்ரச்சனை வருகிறது. இதனால் ஒரு ஜோடி ஒரு வாரம் வெளியில் படுக்க வேண்டும். மற்ற ஜோடி உள்ளே படுக்க வேண்டும். என்று பாட்டி சொல்கிறார். இருந்தும் ரூம் பஞ்சாயத்து பெருசாகிறது. இதற்கு அண்ணாமலை முடிவு கட்ட நினைக்கிறார். இன்னொரு பக்கம் கடையில் சுருதி அம்மா, தான் வாங்கிய பொருளை திருப்பி தந்ததால் ரோகினி தன்னுடைய தாலிக் கொடியை அடமானம் வைத்து பணம் கொடுத்தார்.

Advertisement

சிறகடிக்க ஆசை சீரியல்:

இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ் வீட்டில் பயங்கரமாக முத்துவிடம் சண்டை போட்டார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் ரோகினியின் மகன் கிரஷுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்து ஹாஸ்பிடலில் இருந்தார். இது ரோகினிக்கு தெரிந்தவுடன் அவர் பதறிப்போய் ஹாஸ்பிடல் சென்றார். அந்த சமயம் பார்த்து ஹாஸ்பிடலுக்கு வந்த முத்து- மீனா அவர்களை சந்தித்து நடந்ததை தெரிந்து கொண்டு அவர்கள் தங்களுடைய வீட்டிற்கு கிருசை அழைத்து வந்து வந்தார்கள். வழக்கம்போல் விஜயா வீட்டில் இருக்கக் கூடாது என்று திட்டுகிறார்.

சீரியல் கதை:

பின் மீனா, கிருஷுக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்தார். இதை பார்த்து ரோகினி கோபம் அடைந்து கிருஷ்-மீனாவை பிரிக்க வேண்டும் என்ற திட்டம் போட்டு குடும்பத்தில் உள்ள எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டார். மேலும், ரோகினி, தன்னுடைய அம்மாவிடம் சண்டை போட்டார். ஒரு வழியாக கிருஷுக்கு தன் தாய் யார் என்பது தெரிந்து விட்டது. பின் கிரிஷ் கண்ணை திறக்கும் போது தன் அம்மா ரோஹினியை பார்த்து சந்தோசம் பட்டார்.

Advertisement

சீரியல் ட்ராக்:

ஒரு வழியாக ரோகினி தப்பித்து விடுகிறார். அதன் பின் வீட்டில் முத்துவின் நண்பர் தன்னுடைய அண்ணன் கல்யாணம் என்று பத்திரிக்கை வைக்க வருகிறார். அப்போது முத்து கிண்டலாக தன் கல்யாணத்தை பற்றி பேசி இருக்கிறார். இதைக் கேட்டு மீனா மனம் உடைந்து விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று விஜயா மீனாவை கிண்டல் செய்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், அண்ணாமலை- முத்து இருவருமே மீனா எங்கே? என்று கேட்கிறார்கள். மீனா எங்கே என்று தெரியவில்லை.

Advertisement

சீரியல் ப்ரோமோ:

பின் மீனாவின் வீட்டிற்கு போன் செய்து முத்து கேட்கிறார். அவர்களும் தெரியவில்லை என்று சொல்கிறார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று சிட்டி சத்யாவை தூண்டி விடுகிறார். சத்யா போலீசில் முத்து மீது புகார் கொடுக்கிறார். அந்த சமயம் பார்த்து முத்துவும் மீனா காணவில்லை என்று புகார் கொடுக்க வருகிறார். இனி வரும் நாட்களில்
மீனா எங்கே போனார்? முத்து மீனாவை கண்டுபிடிப்பாரா? சத்யா- முத்து இடையே கலவரம் வெடிக்குமா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement