வேலைக்காரன் நஷ்டத்தை அடுத்த படத்தில் அடைக்கிறேன் - சிவகார்த்திகேயன் உறுதி
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயன், நயன்தாரா, ரோபோ சங்கர், பகாத் பாஸில் என பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தார்கள். படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை.
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை விட இந்த படத்திற்கு 30 சதவீதம் கூடுதலான விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சில பிரச்சனைகள் வந்து பின் ஒருவழியாக படம் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனத்தால் பல இடங்களில் படம் பெரிதாக வசூலிக்கவில்லை.
கேரளா, கர்நாடகா, மற்றும் ஓவர்சீஸ் உரிமையை வாங்கியர்கள் இந்த படத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கிட்டத்தட்ட 30% அவர்கள் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நஷ்டத்தை அடுத்த படத்தில் அடைப்பதாக கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.