தன் குடும்பபத்திற்காக சூரி செய்த காரியம் - மதுரைக்கு விரைந்தார் சிவகார்த்திகேயன் !

By Ajju · 1/11/2017
வழக்கமாக நடிகர்கள் தங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட், போன்றவற்றில் அதிக லாபம் ஈட்ட முதலீடு செய்வார்கள். அதே போல் நடிகர் பரோட்டா சூரி தனது பணத்தை ஹோட்டலில் முதலீடு செய்துள்ளார். தன் குடுப்பத்திற்காக ஹோட்டல் ஒன்றை காட்டியுள்ளார். சூரி கூட்டு குடும்பமாக வாழ ஆசைப்படுபவர், அவரது சம்பளம் போதுமானதாக இருந்தாலும், தன்னுடை குடும்பத்தை இன்னும் சந்தோஷப்படுத்த அவர் ஹோட்டல் ஒன்றை மதுரையில் கட்டியுள்ளார். ஹோட்டலின் திறப்பு விழாவிற்கு தன்னுடை நண்பரும் சக நடிகருமான சிவகார்த்திகேயனை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறாராம் சூரி. சூரியின் இந்த அழைப்பை ஏற்ற சிவகார்த்திகேயன் மதுரைக்கு வர இருக்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்போது தெரிகிறது பரோட்டா சூரி என்று அவரை ஏன் அழைக்கிறோம் என்று.
Tamil Behind Talkies AMP · Quick view
View full