தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுஜாதா மோகன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் பாடி உள்ளார். இதுவரை இவர் 4000 பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். இவருடைய பாடல் திறமைக்கு பல விருதுகளையும் வாங்கி உள்ளார். பாடகி சுஜாதா மோகன் அவர்கள் 1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஸ்வேதா மோகன் என்ற ஒரு மகள் உள்ளார். இவர் 1985ம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் பிறந்தவர்.

ஸ்வேதா மோகனுக்கும் சிறு வயதில் இருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். பின் இவரும் தற்போது சினிமா உலகில் மிகப் பிரபலமான பின்னணிப் பாடகியாக திகழ்ந்து வருகிறார். ஸ்வேதா மோகனும் ஒரு பிரபலமான இந்திய பாடகி ஆவார். இவரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களில் பாடி வருகிறார். இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி உள்ளார. அதோடு விஜய் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நடுவராக ஸ்வேதா மோகன் பங்கு பெற்று வருகிறார்.

Advertisement

இதையும் பாருங்க : நான் அவரை அவ்வளவு கிண்டல் செய்திருக்கிறேன். இருந்தாலும் அவர் தான் எனக்கு பிடிக்கும்-வெங்கடேஷ் பட்

இந்த சூப்பர் சிங்கர் தொடங்கிய காலத்தில் சுஜாதா மோகன் தான் நடுவராக இருந்தார். பின் தற்போது ஸ்வேதா மோகன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நடுவராக உள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு அஸ்வின் சாஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷ்ரேஷ்டா(SHRESTA) என்ற ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் சுஜாதா, சுஜாதாவின் மகள் ஸ்வேதா, சுவேதாவின் மகள் ஷ்ரேஷ்டா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

Advertisement

இதனை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் மகள், மகளின் மகள் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஒரு சில பேர் புகைப்படம் ரொம்ப க்யூட்டாக, அழகாக உள்ளது என்றும் கூறி வருகிறார்கள். அதோடு அடுத்த பாடகி தயார் என்றும் கூறி வருகிறார்கள். மேலும், இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும்,லைக் செய்தும் வருகிறார்கள்.

Advertisement
Advertisement