‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார். மேலும், இந்த சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். அதிலும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த சார்லின் சாப்ளின் படத்தில் பாடிய “என்ன மச்சான், சொல்லு புள்ள” பாடல் வேற லெவல்ல தெறிக்கவிட்டது. என்று சொல்லலாம்.

இதையும் பாருங்க : இத பத்தி சைதன்யா வாய் திறந்து இருக்கலாம் – சமந்தாவுடன் கள்ள தொடர்பு சர்ச்சை குறித்து சமந்தாவின் டிசைனர்.

Advertisement

இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து உள்ளார். இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக செந்தில்– ராஜலட்சுமி இருவரும் சின்னத்திரை பக்கம் சென்று உள்ளார்கள். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் இதயத்தை திருடாதே சீரியலும் ஒன்று.

தற்போது இந்த சீரியலில் செந்தில்– ராஜலட்சுமி இணைந்துள்ளார்கள். இந்த சீரியல் நடிகர்களுடன் செந்தில்– ராஜலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து பலரும் செந்தில்– ராஜலட்சுமிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும், இவர்கள் இதற்கு முன்னாடி விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்கள் என்பது குறிபிடத்தக்கது.

Advertisement
Advertisement