தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் புலிக்குத்தி பாண்டி. இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு அவர்கள் தற்போது ‘டாணாக்கரன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் தமிழ் இயக்கி இருக்கிறார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குநர் தமிழ் எடுத்திருக்கும் திரைப்படம் ‘டாணாக்கரன்’ சமீபத்தில் தான் ஓடிடியில் வெளியாகி இருந்தது. இந்த படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு பலரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தனது திரைப்பயணம் குறித்து இயக்குனர் தமிழ் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் ‘டாணாக்கரன்’ படம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது.

இதையும் பாருங்க : இதுக்கு ஏன் 1000ரூபா கொடுத்து பாக்கணும் – பீஸ்ட் குறித்து டிடி போட்ட பதிவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள். அப்படி என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

Advertisement

இயக்குனர் தமிழ் அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, இந்த படம் தொடங்குவதற்கு முன்பு பலரிடம் கதை சொன்னது போல பல கேள்விகள் இருந்தன. ரசிகர்களுக்கு புரியுமா? உங்கள் சொந்த அனுபவம் என்கிறீர்களா? என நிறைய கேள்விகள் இருந்தன. ஆனால், நான் உண்மையில் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் நம்பினேன். அவர்கள் இந்த படத்தை நிச்சயம் கொண்டாடுவார்கள் என உறுதியாக இருந்தேன். நான் நினைத்தது இன்று மிகச் சரியாக நடந்து விட்டது.

காவலதிகாரி தமிழ் to இயக்குனர் தமிழ் பயணம்:

சொல்லப்போனால், நான் காவல் துறையில் நுழைவதற்கு முன்னதாகவே இயக்குனராக வேண்டும் என்று முயற்சி எடுத்தேன். எனக்கு அப்போதிலிருந்தே அந்த கனவு இருந்தது. எப்படியோ சினிமாவுக்குள் நுழைந்து விட வேண்டும் என உறுதியாக இருந்தேன். என் திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும் போது என் மனைவியிடம் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கொள்வதில் பிரச்சனை இல்லை. நான் போலீசாக இருக்கமாட்டேன், சினிமாவுக்குள் போய்விடுவேன் என்று அவர்களை பார்த்த முதல் முறையை கூறிவிட்டேன். அந்த அளவிற்கு நான் சினிமாவில் நுழைந்து விடுவதில் உறுதியாகவும் தீர்மானமான நம்பிக்கையுடன் இருந்தேன். காவல்துறையில் 12 வருடங்கள் பணியாற்றினேன். அதற்குப் பிறகுதான் சினிமாவுக்குள் நுழைந்தேன்.

Advertisement

படத்தில் காட்டியது போல் காவலர் பயிற்சிப் பள்ளியில் எதிர்கொண்ட பிரச்சினைகள்:

கண்டிப்பாக பிரச்சனைகள் இருக்கிறது. நான் பேட்ஜில் நடந்ததை மட்டும் வைத்து நான் இந்த படத்தை இயக்கவில்லை. இதற்கு முன்னதாக இருந்த பல்வேறு பேட்ஜ் நண்பர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் அனைத்தையும் தொகுத்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறேன். காவலர் பயிற்சிப் பள்ளியில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதை தான் நான் படத்தில் காண்பித்திருக்கிறேன்.

Advertisement

படத்தில் ஒரு மரத்திற்கு காவலர் ஒருவர் காவல் காக்கும் காட்சி:

அந்த காட்சி அப்படியே மணிமுத்தாரில் நடந்த ஒன்று. மணிமுத்தாரில் பயிற்சி எடுத்தபோது யாரிடம் கேட்டாலும் அதற்கு பதில் சொல்வார்கள். உண்மையிலேயே நடந்தது தான். அதனால் தான் நான் படத்தில் காட்சியாக வைத்தேன். காவல்துறையில் இது போன்ற நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடக்கும். இந்த சம்பவத்தில் நானும் கூட இருந்திருக்கிறேன்.

அடுத்த படம் கதைக்களம் குறித்து கூறியது:

அடுத்து ஒரு கேங்க்ஸ்டர் படம் எடுக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தயாரிப்பு நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளேன். நடிப்பது, இயக்குவது எல்லாமே காவல்துறை ஆக இருப்பதால் இனிமேல் காவல்துறை கதையே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். விரைவில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும். கூடிய விரைவில் அதற்கான தகவலையும் கூறுகிறேன் என்று கூறி இருந்தார்.

Advertisement