கடந்த சில காலமாகவே சமூகவலைதளத்தில் #metoo என்ற ஹேஸ் டேக் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை கூறி வந்த நிலையில், இந்த சர்ச்சை அதிகம் சிக்கியவர்தான் பிரபல இயக்குனரும் நடிகருமான சஜித் கான்.

இவர் இந்தியில் பிரபல இயக்குனரான ஃபரா கானின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதத்திற்கு முன்னர் இவர் மீது இந்தி நடிகை ராசீன், உதவி இயக்குனர் சலோனி சோப்ரா மற்றும் ஒரு பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டை வைத்தனர். கொடுத்தனர் இதனால் இவரது பெயர் சமூகவலைதளத்தில் மிகவும் விமர்சிக்கப்பட்டது.

இதையும் படியுங்க : லிப் லாக் காட்சிகளுக்கு நோ சொல்லி வந்த தமன்னா.! ஆனால், இந்த நடிகர் என்றால் மட்டும் ஓகேவாம்.! 

Advertisement

தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததால் இவர் அக்ஷய் குமாரை வைத்து இயக்கவிருந்த ‘ஹவுஸ் புல் 4’ படத்தில் இருந்தும் விலகினார். இப்படி அடுக்கடுக்காக சர்ச்சையில் சிக்கி வந்த இயக்குனரை மிகவும் நல்லவர் என கூறியுள்ளார் தமன்னா. நடிகை தமன்னா, சஜித் கான் இயக்கிய ‘ஹிம்மத்வாலா’ , ‘ஹம்சகல்ஸ்’ போன்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால், இந்தப் படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தமன்னாவிடம் சஜித் கானை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமன்னா, நான் அவருடைய இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இந்த படங்களில் படப்பிடிப்பின்போது அவர் எனக்கு எந்த தொந்தரவையும் தந்ததும் இல்லை. அதே போல என்னிடம் தவறாக நடந்து கொண்டதும் இல்லை. அவருடன் பணியாற்றும் போது நான் மிகவும் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் தான் உணர்ந்தேன். மற்றவர்கள் கூறும் புகார் பற்றி எனக்கு தெரியாது, அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம். என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement