சினிமா நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவது ஒன்றும் புதுசு அல்ல வழக்கமான ஒன்று. அதுமட்டும் இல்லாமல் இரண்டு மாதத்திற்கு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை யாராவது ஒரு நடிகை இந்த விஷயத்தில் சிக்கி விடுகிறார்கள். கோலிவுட், டோலிவுட், பாலிவூட் என அனைத்து சினிமா துறையில் உள்ள ஏதாவது ஒரு நடிகை இந்த விபச்சாரத்தில் மாட்டி கொள்கிறார். இது தொடர்பாக மாதம் மாதம் ஒரு நியூஸ் சோசியல் மீடியாவில் வருகிறது. இதனால் நவீன காலம் முன்னேற முன்னேற இந்த மாதிரி தவறுகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சமீபத்தில் கூட ஒரு சீரியல் நடிகை விபச்சார வழக்கில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தரிக்கப்பட்ட புகைப்படம்…

மேலும், சினிமா நடிகைகள் தாங்கள் பணியாற்றும் இடங்களில் மட்டும் இல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் பல பாலியல் கொடுமைக்கு ஆட்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகை ஒருவரை அவருடைய கணவரும், அவருடைய முதல் மனைவியும் சேர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி, கொலை மிரட்டல் செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். தற்போது இந்த நியூஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : விஜய்யை பார்க்க போக கூடாதுனு கணவரோட சண்ட. மண்டையில் அடி பட்டுடிச்சி. சரவணன் மீனாட்சி நடிகை பேட்டி.

Advertisement

இந்த நடிகை சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு 39 வயது ஆகிறது. இவர் செனாய் நகரில் சொந்தமாக அழகு நிலையம் மற்றும் யோகா பயிற்சி கிளினிக் ஒன்று நடத்தி வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த அந்த படத்தின் போது அறிமுகமானவர் தான் இவருடைய கணவர் சரவணன் சுப்பிரமணி. சரவணன் சுப்பிரமணி துணை நடிகையிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை. உங்களை மணக்க விரும்புகிறேன் என்று கூறி உள்ளார். பின் இவர்கள் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து தான் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், திடீரென்று சரவணன் சுப்பிரமணி அவர்கள் நடிகையிடம் இருந்து நகைகள், சொத்துக்கள், வருமானத்தை எல்லாரும் அபகரித்துக் கொண்டு உள்ளார்.

பின் இவருடைய நண்பர்களை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து நடிகையை பாலியல் ரீதியாக பல நாட்கள் தொடர்ந்து தொல்லை செய்து வந்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் நடிகைக்கு 2 மகன்கள் உள்ளார்கள். அந்த மகன்களையும் சரவணன் சுப்பிரமணி அடித்து துன்புறுத்துகிறார். இதனால் அந்த நடிகை தன் மகன்கள் உடன் வீட்டை விட்டு வெளியே வந்து வாழ்ந்து வருகிறார். மேலும், சரவணன் சுப்பிரமணி ஏற்கனவே ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்து அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. பின் நடிகையின் தன்னுடைய மகன்களுக்கு திண்டுக்கல் சரவணன் அவர்கள் மூலம் கொலை மிரட்டல் கொடுத்து வந்து உள்ளது. இதனால் நடிகை பயந்து போய் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். தற்போது இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த துணை நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.

Advertisement
Advertisement