மெர்சல் சென்சார் சான்றிதழில் மிகப் பெரிய பிரச்சனை - தீருமா சிக்கல் ?

By Ashok · 14/10/2017
தளபதி விஜயின் மெர்சல் படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே மீதம் உள்ள நிலையில் இப் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது . மெர்சல் படம் ஜல்லிக்கட்டு போராட்டைத்தை மைய கருவாக கொண்ட வெளிவர இருக்கும் படம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது . இப்படத்தின் சென்சார் முடிந்துவிட்ட நிலையில் விலங்குகள் நல வாரியம் அனுமதி இன்று எப்படி அது நடந்தது என கேள்வி எழுந்ததுள்ளது . அதற்கு விளக்கம் கேட்டு விலங்குகள் நல வாரியம் சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விளக்கமளித்துள்ள சென்சார் போர்டு, "மெர்சல் படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டதாக வரும் செய்தி பொய்யானது. கடந்த 6ம் தேதி மெர்சல் படத்தை பார்த்தோம், மேலும் AWBIயிடம் இருந்து NOC சான்றிதழ் சமர்ப்பித்தால் உடனே சென்சார் சான்றிதழ் வழங்குவதாகவே தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளோம்" என கூறியுள்ளனர். இந்நிலையில் விஜய் கூறிய அந்த வார்த்தைகளே நினைவிற்கு வருகிறது " இந்த உலகத்துல அவ்வளவு ஈசியா வாழ விட மாட்டாங்க போட்டு படுத்தி எடுப்பாங்க அதெல்லாம் தான்டி தான் நாம மேல வரனும்" இதையெல்லாம் மனதில் வைத்துதான் கூறியிருப்பாரோ ?? என்ற என்னம் தோன்றுகிறது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full