மதுரையைச் சேர்ந்தவர் நம்ம வைகைப்புயல் வடிவேலு. இவருடைய அப்பா நடராசன் அம்மா சரோஜினி அம்மாள். வைகைபுயலின் உடன் பிறந்தவர்கள் 4 பேர். கண்ணிகா, கார்த்திகா, கலைவாணி மற்றும் சுப்ரமணி ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள் ஆவர். சிறு வயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் காட்டியதில்லை நம் மீம் கிரியேட்டர்ஸ்களின் கடவுள் வடிவேலு. தனது சிறு வயதிலிருந்தே நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு நாடகங்களில் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்து வந்துள்ளார்.
ஒரு முறை வகைப்புயலின் ஊருக்கு பட்பிடிப்பு சம்மந்தமாக ராஜ் கிரண் வருகிறார். அப்போது ராஜ் கிரணிடம் அறிமுகமாகி அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வேலை செய்யத் துவங்குகிறார் வடிவேலு. இவரின் நடிப்புத் திறனைக் கண்டு தன்னுடைய ‘என் ராசாவின் மனதிலே’ என்ற படத்தில் நடிக்க வைக்கிறார் ராஜ் கிரண்.
பின்னர் அந்த படம் பெரும் ஹிட் ஆக 2000ஆம் ஆண்டிற்க்குள் அசைக்க முடியாத ஒரு நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் கொடிநாட்டினார். அதற்கு அடுத்த படியாக 2003ஆம் ஆண்டு வந்த ‘வின்னர்’ படம் அவரது சினிமா வாழ்க்கையில் அவரது அடுத்த லெவலிற்கு தூக்கி விட்டது.