கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் வீடியோவிற்கு நெட்டிசன்கள் குவித்து வரும் விமர்சனம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் கியாரா அத்வானி. இவர் 2014இல் வெளிவந்த கபீர் சதானந்த் இயக்கிய புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும், இவர் இந்தி மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு இந்தியில் எடுக்கப்பட்ட படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் தோனியின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் திஷா பதானி நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : வீட்டில் பிறந்த முதல் வாரிசு – குழந்தையை கையில் ஏந்தியபடி பிரியங்கா வெளியிட்ட புகைப்படம். ரசிகர்கள் வாழ்த்து மழை.

Advertisement

கியாரா திரைப்பயணம்:

தோனியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை கியாரா அத்வானி நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது. அதனை தொடர்ந்து இவர் Lust Stories, Kabir Singh போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது கியாரா நடித்து இருக்கும் படம் ‘Jugjugg Jeeyo’. இந்த படத்தில் இவர் வருண் தவானுடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தை ராஜ் மேத்தா இயக்கி இருக்கிறார். இந்த படம் ஜூன் 24ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

கியாரா நடித்த படம்:

இதனால் இந்த படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினருடன் நிறைய ஊர்களுக்குச் சென்று கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், படக்குழுவுடன் கியாராவும் சென்று கொண்டு இருக்கிறார். இந்நிலையில் படக்குழுவுடன் கியாரா செல்லும் போது தான் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மும்பை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது கியாரா அத்வானியும், வருண் தவானும் வடா பாவ் சாப்பிட்டு இருக்கிறார்கள். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகி இருக்கிறது.

Advertisement

கியாராவின் லேட்டஸ்ட் வீடியோ:

அதாவது, மெட்ரோ ரயிலிலேயே உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது என்பது விதி. ரயில் நிலையத்தின் தூய்மை பேணுவதற்காக இந்த விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அணில் கபூர் உள்ளிட்ட படக்குழு உடன் கியாரா, வருண் ஆகியோர் ரயிலில் பயணம் செய்யும்போது வடா பாவ் சாப்பிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்து தான் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். செலிபிரிட்டி என்பதால் என்ன வேண்டுமானால் செய்யலாமா? விதியை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

அதிலும் ஒரு சிலர், மகாராஷ்டிராவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே, மெட்ரோ நிர்வாகம் ஆகியோரை டேக் செய்து, இது போன்ற விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை அனுமதிப்பது தவறான முன்னுதாரணம் எப்படி நீங்கள் அனுமதிக்க முடியும்? என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம், ‘வடா பாவ் சாப்பிட்டது குத்தமா?’ என்ற ரீதியில் கியாராவுக்கு ஆதரவாகவும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். ஆனால், இது தொடர்பாக கியாரா அத்வானி, வருண் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

Advertisement