இயக்குனர் வசந்த் பாலனின் மறுபக்கம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வசந்தபாலன். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன், காதலன், இந்தியன் போன்ற படங்களில் ஷங்கருக்கு உதவி இயக்குனராக இருந்தார் வசந்தபாலன்.

அதன் பின் இவர் 2003 ஆம் ஆண்டு ஆல்பம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. பின் இவர் வெயில் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் மூலம் வசந்த்பாலன் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த படத்திற்காக பல விருதுகள் கிடைத்திருந்தது. அதிலும் இவர் இயக்கிய வெயில் திரைப்படம் தேசிய விருதை பெற்று இருந்தது.

Advertisement

வசந்த பாலன் திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து இவர் அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில், அநீதி போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படி இவர் கிட்டத்தட்ட தமிழ் திரை உலகில் நுழைந்து 22 வருடங்கள் கடந்து இருக்கிறது.

தலைமைச் செயலகம்:

இருந்தாலும் இவர் வெறும் ஏழு படங்களை மட்டும் தான் இயக்கி இருக்கிறார். தற்போது இவர் தலைமைச் செயலகம் என்ற வெப் தொடரை இயக்கி வெளியிட்டு இருக்கிறார். இந்த வெப் தொடர் நேரடியாக z5 தளத்தில் வெளியாகியிருக்கிறது. இதில் கிஷோர், ஸ்ரீயா ரெட்டி, பரத், ரம்யா நம்பிசன் உட்பட பல பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இது மொத்தம் எட்டு எபிசோடுகளை கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் களத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

Advertisement

வசந்தபாலன் பேட்டி:

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வசந்த்பாலன் தொடர் புரோமோஷனுக்காக பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், இதுவரை கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தான் இயக்கி வந்திருக்கிறேன். கமர்சியல் படங்களை இயக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று பலருமே கேட்டிருக்கிறார்கள். வீட்டிலும் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார்கள் . ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும், இரண்டு பிள்ளைகளுக்கும் பள்ளி திறக்க போகிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

Advertisement

வசந்தபாலன் நிலைமை:

இப்பவும் நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கோம். பொருளாதார சூழ்நிலை என்னை ரொம்ப அழுத்திக் கொண்டே இருக்கிறது. அதேபோல் நான் 22 வருட திரை வாழ்க்கையில் வெறும் ஏழு படங்களை தான் இயக்கியிருக்கிறேன். இதற்கு பின்னணியில் எனக்கு பிடிவாதம் இருக்கிறதா? என்றால் இல்லை. எனக்கு அவ்வளவுதான் வந்தது. இது செய்ய தான் பிடித்திருக்கிறது. அதை நோக்கித்தான் பயணிக்கிறேன். ஆனால், சூழ்நிலை என்னை கமர்சியல் படத்தை நோக்கி தள்ளுகிறது என்று பேசி இருக்கிறார்.

Advertisement