பட வாய்ப்புகள் குறைந்து விட்டால் நடிகைகள் கவர்ச்சியில் இறங்குவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் நடிகை பிரியங்கா நாயர் மட்டும் விதிவிலக்கல்ல. தமிழில், 2006ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த படம் வெயில். இந்த படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் பிரியாங்கா நாயர். இவர் 1985ஆம் ஆண்டு கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.

கல்லூரியில் படித்துக்கொண்டு மாடலிங் செய்து வந்த பிரியங்கா, சில மலையாள சீரியல்களிலிம் நடித்து வந்தார். அதன்பின்னர் தனது 21 வயதில் வெயில் பட ஆடிஷனில் கலந்துகொண்டு தன் நடிப்பு திறமை மூலம் தேர்வானார் பிரியங்கா. 2006ல் வந்த வெயில் படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்காக தேசிய விருதையும், மாநில அரசின் விருதையும் பெற்றது.

இதையும் பாருங்க : செம்ம.! இந்த வாரம் இரண்டு வெளியேற்றம்.! இது என்ன எதிர்பாராத ட்விஸ்ட்.! ஷாக்கிங் வீடியோ.!

Advertisement

பிரியங்கா நாயர் தமிழில், தொல்லைபேசி, செங்காத்து பூமியிலே, போன்ற படங்களில் நடித்தார். பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்த அவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டிகு ஜோடியாக நடித்துள்ளார். தனது 27 வயதில் கடந்த 2012ஆம் ஆண்டு துணை இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் .

திருமணத்திற்கு பிறகு பிரியங்காவை நடிக்க வேண்டாம் என கணவர் கூறியதால், அவரை விவாகரத்து செய்து விட்டார். நீண்ட காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பிரியங்கா தற்போது “உற்றான்” என்ற படத்தில் கமலி என்ற கல்லூரி பேராசிரியை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் . இந்த படத்தில், முதன் முறையாக அரை நிர்வாணமாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 

Advertisement
Advertisement