விஜய்க்கு செய்த உதவியை கேவலப்படுத்தாதீங்க.! எஸ் ஏ சியிடம் கோபபட்ட விஜயகாந்த்.!

By Rajkumar · 10/7/2019

நடிகர் விஜய் குடும்பத்திற்கும், நடிகர் விஜயகாந்த் குடும்பத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நடிகர் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் , நடிகர் விஜயகாந்தை சட்டம் ஒரு இருட்டறை ‘ என்ற படத்தில் அறிமுகம் செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து பல்வேறு படங்களை இயக்கினார் எஸ் ஏ சந்திரசேகர். 

அதே போல நடிகர் விஜய் ‘நாளைய தீர்ப்பு ‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாலும், விஜய்க்கு திரைத்துறைக்கு ஒரு சிறந்த எண்ட்ரியாக அமைந்தது விஜய்காந்த் நடித்த செந்தூர பாண்டி ‘ என்ற படம் தான். அந்த நன்றியை மனதில் இன்று வரை வைத்துள்ளார் நடிகர் விஜய். 

இதையும் பாருங்க : போதையில் லைவ் சாட்.! யாஷிகாவிற்கு உதட்டில் முத்தம் கொடுத்த நண்பர்.! ஷாக்கிங் வீடியோ.! 

மேலும், எஸ்.யே. சி 1993 ஆம் ஆண்டு செந்தூர பாண்டி என்ற படத்தை எடுக்கும் போது விஜயகாந்த் ஒரு மிகப்பெரிய ஸ்டாரக இருந்தார் அப்போது அந்த படத்தில் நடிப்பதற்கு விஜய்காந்திடம் எஸ்.யே. சி சம்பளம் பேசிய போது நடிகர் விஜயகாந்த் சம்பளத்தை பற்றி எல்லாம் பிறகு பேசிக்கொள்வோம் முதலில் படப்பிடிப்பை தொடங்குங்கள் சார் என்று சொன்னாராம் கேப்டன்.

விஜயகாந்தும் நடித்து கொடுத்து அந்த படம் செம்ம ஹிட் அடிக்க, படம் வெளியான பின்னர் அந்த படத்தின் லாபத்தை விஜயகாந்திற்கு கொடுக்க, அவர் வாங்க மறுத்துவிட்டாராம். இது நான் செய்த உதவி உங்களுக்கு, இதற்கு காசு கொடுத்து என்னை கேவலப்படுத்தாதீங்க சார் 

90 காலகட்டங்களில் ஒரு மிகப்பெரிய ஸ்டாரக இருந்தாலும் தம்மை ஆளாக்கிய நபரை மதித்து பழசை மறக்காமல் விஜயகாந்த்தின் அந்த நல்ல மனசுக்குத்தான் அவரை எல்லோரும் இன்றும் கேப்டன் என்று அழைக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full