தமிழ் நாட்டில் காவேரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி. ஐ. பி எல் போட்டிகளை நடத்த கூடாது என்று நேற்று நடந்த போராட்டத்தை நாம் அனைவரும் அறிவோம்.நேற்று சென்னையில் நடந்த போட்டியில் போராட்டம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிதிருந்தனர். மைத்தனத்தினுள் மேள தாள வாத்தியங்களை கொண்டு வர கூடாது, விளம்பர பலகைகளை கொண்டுவர கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாட்டுடன் தான் ரசிகர்கள் மைதானத்தினுள் அனுமதிக்க்பட்டனர்.

Advertisement

அத்தனையும் மீறி ஒரு சிலர் காவேரி மேலாண்மை அமைக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.இன்னும் சிலரோ மைத்தனத்தினுல் செருப்புகளை வீசியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதேயெல்லாம் தாண்டி ஒரு சிலர் விஜய் மக்கள் மன்றத்தின் கொடி கையில் வைத்துக்கொண்டு அசைத்துள்ளார்.

இவ்வளவு கட்டுப்பாடு விதித்து எப்படி விஜய் ரசிகர்கள் விஜயின் மன்ற கொடியை மைத்தானத்தினுள் கொண்டு சென்றார்கள் என்று தெரியவில்லை. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசைகர்களால் பெரிதும் ட்ரெண்ட் செய்யபட்டு வருகின்றது.

Advertisement
Advertisement