மெர்சல் படத்தில் இடம் பெற்ற அந்த குறிப்பிட்ட ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு காட்சிகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், இதனை எதிர்ப்பதாக நினைத்து பாரதிய ஜனதா கட்சி கொடுத்த சத்தம் எல்லாம், படத்தை ப்ரோமோட் செயத்தான் உதவியது.

இந்த பிரச்சனை ஒரு வழியாக அடங்கி தற்போது படம் செம்ம ரெஸ்பான்சுடன் திரையில் ஓடிகொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘மே17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆளுமை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:

Advertisement

அவருக்கு மக்கள் மீது அக்கரை இருக்கும் பட்சத்தில் ஜி.எஸ்.டி பற்றி முதல் ஆளாக குரல் கொடுத்திருக்க வேண்டும். அவர் ஒரு நல்ல ஆளுமை மிக்க கலைஞராக இருந்தால் முதலில் குரல் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படி ஒரு தைரியத்தை விஜயிடம் இன்னும் நான் பார்க்வில்லை, அது மனதிற்கு வருத்தமாக உள்ளது.எனக் கூறினார் திருமுருகன் காந்தி.

Advertisement
Advertisement