ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழ் நாட்டில் நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்துள்ளது. அவர் இருந்தவரை அமைதியாக இருந்த பல நடிகர்கள், அவர் மறைந்த பிறகு அரசியலில் குதித்துள்ளனர். நடிகர் கமல் தீவிர அசாசியலில் இறங்கி விட்டார். நடிகர் ரஜினி பட்டும் படாமல் அரசியலில் உள்ளார். விரைவில் கட்சி ஆரமிப்பதாகவும் கூறிஉள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த சமயத்திலேயே விஜய் கட்சி துவங்க உள்ளார் என்றொரு தகவல் கசிய ஆரமித்தது. ஆனால் நடிகர் விஜய் அது பற்றி அப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வில்லை. இந்த நிலையில் சமீபத்தில் விஜய் தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது பற்றி நாம் அறிவோம். அப்போது அங்கு நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி கேரள பெண் ஒருவர் ஒரு இன்டெர்வியூவில் கூறி உள்ளார்.
அது என்ன வென்றால், ஒரு ரசிகர் விஜயிடம், நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள் அண்ணா என்று கேற்றுள்ளார். அதற்கு விஜய், “நான் நடித்தது போதுமா” என்று ஒரு வரியில் தன் தெளிவான விளக்கத்தை கூறியுள்ளார். இதை பதிலை கேட்டு அங்கு இருந்தவர்கள் அசந்துபோயுள்ளனர்.