யார நிப்பான் பெயிண்ட்னு சொன்ன - ரசிகரின் கமண்டால் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ஜாக்லின்.

By Rajkumar · 9/9/2020

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நடிகை ஜாக்லின்.

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.அவரின் நடிப்பும், பேச்சுத்திறனும் ரசிகர்களை ரசிக்க வைத்து உள்ளது. அதிலும் தற்போது அம்மணி நடித்து வரும் தேன்மொழி தொடர் மூலம் இவருக்கு மேலும் இளசுகளின் ரசிகர் பட்டாளம் கூடியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் அடிக்கடி புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம்.அந்த வகையில் சமீபத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் 'நிப்பான் பெயிண்ட் ' என்று கேலி செய்து இருந்தார். ரசிகரின் இந்த கமென்டிற்கு 'உன் கண்ணை செக் பண்ணு ' என்று பதில் அளித்தார் ஜாக்லின். மேலும், அதுவும் பத்தாமல் மேக்கப் இல்லாமல் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு 'என்னை கமெண்ட்டில் நிப்பான் பெயிண்ட் என்று கூறியவர்களுக்காக இதோ என்னுடைய மேக்கப் இல்லாத புகைப்படம். ஆம், நான் மேக்கப் போடுவேன். எனக்கு மேக்கப் போடுவது மிகவும் பிடிக்கும். அது என்னுடைய வேலையில் ஒரு பகுதி' என்று குறிப்பிட்டுள்ளார் ஜாக்லின்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full