விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி என்ற தொடரில் கார்த்திக் மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் மானசா. சீரியலில் மட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதல் ஜோடிகளாக தான் சுற்றி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் இணைந்து அடிக்கடி புகைப்படம் எடுத்துக்கொள்வது, மியூசிக்கலி செய்வது என்பது வழக்கம். அதனை தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட இவர்கள் வெளிநாட்டிற்கு சென்று அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் சஞ்சீவ் மற்றும் மானஸா கோவில் என்று கூட பாராமல் ஜிங்கின மணி பாடலுக்கு ம்யூசிகலி செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.