யாருக்கும் விளக்க வேண்டும் என்று எனக்கு கடமை இல்லை - ஷிவானியின் 4.30 மணி போஸ்ட்.

By Rajkumar · 27/7/2020

சமீபகாலமாகவே போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள் ரம்யா பாண்டியன் என்று பலர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட இதன் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அந்த வகையில் சமீபகாலமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார் விஜய் டிவி சீரியல் நடிகை ஷிவானி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

https://www.instagram.com/p/CDJJ-mdl1s9/

அதிலும் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி. பகல் நிலவு சீரியலுக்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார்.

இதையும் பாருங்க : சூர்யா தேவி கொரோனாவால் தலைமறைவானது உண்மை தான் - ஆதாரத்தை வெளியிட்ட வனிதா.

கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ரெட்டை ரோஜா' என்ற தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களாக தினமும் மாலை சரியாக 5 மணி ஆனால்தனது று புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இவர் 5 மணிக்கும் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் பெரும்பாலும் கவர்ச்சியாக இருந்தது. இதனால் இவருக்கு அஞ்சுமணி குயின் அஞ்சுமணி வண்டி என்று ரசிகர்கள் பட்டப் பெயரை வைத்து அழைத்து வருகிறார்கள்.

ஆனால், கடந்த சில தினங்களாக 5 மணிக்கு பதிலாக முன்னதாகவே புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். கடந்த சில தினங்களாக 4 மணிக்கு புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி இன்றும் 4 மணி அளவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். வெறும் டீ-ஷர்டை மட்டும் அணிந்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய அணுகுமுறை என்னுடைய தனிப்பட்ட பரிசு யாருக்கும் அதை விவரிக்க வேண்டும் என்பது என்னுடைய கடமை இல்லை என்று பதிவிட்டிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full