கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு-த்ரிஷா நடிக்க கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படம் ரிலீஸ் ஆன முதலில் பிளாப் படம் போல தோன்றினாலும் பின்னர் பார்க்கப் பார்க்க பிடிக்கும் என்பது போல காதலர்களின் படமானது அந்த படம்.

Advertisement

பொதுவான நிஜ வாழ்க்கையில் நடக்கும் காதலின் நிலை குறித்து அழகாக கூறி இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்த படத்தினை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குகிறார்.

ஆனால் இந்த படத்தில் 4 ஹீரோக்கள் நடிக்க உள்ளனர். முதல் பாகத்தில் சிம்பு தவறவிட்ட தன் காதலி ஜெஸ்சியை, மீண்டும் 7 ஆண்டுகள் கழித்து தேடிச்சென்று சந்திப்பது தான் கதை. இந்த கேரக்டரில் முதலில் சிம்பு நடிக்க இருந்தார். ஆனால் தற்போது சிம்புவிற்கு பதில் ‘கார்த்திக்’ கேரக்டரில் மாதவன் நடிக்க உள்ளார். இந்த செய்தியை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Advertisement
Advertisement