‘விருமாண்டி’ படம் நடிகை அபிராமி நினைவிருக்குங்களா,தற்போது பல ஆண்டுகள் கழித்து சீரியலில் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார். 1995 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ‘கதபுருஷன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிராமி. இவருடைய இயற்பெயர் திவ்யா கோபி குமர். மேலும், இவர் 2001 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த முதல் படத்திலேயே இவருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது என்று சொல்லலாம்.

இதனை தொடர்ந்து இவருக்கு சினிமா உலகில் பல பட வாய்ப்புகள் வந்தது.மேலும்,நடிகை அபிராமி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். பின் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தில் நடிகை அபிராமி கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : 4 இல்ல 40 கல்யாணம் கூட பண்ணுவேன் – ஒருவனுக்கு ஒருத்திக்கு புதிய தத்துவத்தை சொன்ன வனிதா.

Advertisement

இந்த படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் மக்களிடையே பேசப்பட்டார் என்றும் சொல்லலாம். மேலும்,நடிகை அபிராமி அவர்கள் தமிழில் வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய பல படங்களில் நடித்து உள்ளார்.இவர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி கேரளாவில் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

மேலும்,இவர் திருமணத்திற்குப் பின்னும் மூன்று படங்களில் நடித்து உள்ளார்.இவர் தமிழில் கடைசியாக நடித்திருக்கும் படம் 36 வயதினிலே படம் . ஆனால், அதற்கு பின்னர் இவர் கன்னடம், மலையாளம் படங்களில் மட்டும் தான் நடித்து வருகின்றார்.பட வாய்ப்புகள் குறைந்ததால் இடையில் சீரியல் பக்கம் சென்றார் அபிராமி. சமீபத்தில் அபிராமி நைட்டி அணிந்தபடி பலா பழத்தை உரித்திக்கொண்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதை பார்த்த பலரும் எப்படி இருந்த அபிராமி எப்படி ஆகிட்டார் என்று வியந்து போய்யுள்ளனர்.

Advertisement
Advertisement