மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே நகருக்கு அவர் இறந்து ஒரு வருடம் கழித்து தான் இடைத்தேர்தல் நடக்கிறது. மேலும் இந்த தேர்தலில் பல புதிய பிரபலங்கள் சுயேச்சை வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர்.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதர்காக இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தாய் விஷால். மேலும், தேர்தல் ஆணையத்திடம் தனக்கு ‘விசில்’ சின்னம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
விஷால் தேர்தலில் போட்டியிடுவதை ஆந்திராவில் பல ஊடங்கள் கொண்டாடி வருகின்றன. ரஜினி கமல், விஜய் எல்லாம் யோசித்து வரும் நிலையில் ஹீரோ விஷால் தைரியமாக அரசியலில் இறங்கிவிட்டார் என ஆந்திர ஊடகங்கள் அவரை கொண்டாடி வருகின்றன.