தமிழ் சினிமாவில் தரமான நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் ஒரு தனி இடம் உண்டு. வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஜீவா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாத்துறையில் பத்து வருடங்களை நிறைவு செய்து பயணித்து வருகிறார், விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘ராட்சசன்’திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

விஷ்ணு விஷால் கடந்த 2011 ஆம் ஆண்டு ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் சட்டப்படி விவாகரத்தும் செய்து கொண்டனர். இதற்கிடையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிகை அமலா பாலை காதலிப்பவதாகவும் விரைவில் திருமணம் செய்யபோவதாகவும் கிசுகிசுக்கபட்டது. ஆனால், இந்த தகவலை மறுத்து பேசியிருந்தார் விஷ்ணு விஷால். இந்த நிலையில் விவாகரத்துக்கான காரணத்தை கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.

இதையும் பாருங்க : விநாயகர் சீரியல் நடிகையின் காதலுக்கு டிமிக்கு கொடுத்த பிக் பாஸ் நடிகர். யாருனு பாருங்க.

அதில், ருமணத்திற்கு முன்பு நான் யாரிடமும் நிறைய பேச மாட்டேன் அது என் கேரியருக்கு தடையாக இருப்பதாக கருதினேன். அதனால் நான் எல்லோருடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்படங்களில் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க, பெண்களிடமும் சகஜமாகப் பழகினேன். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. ‘நீ மாறிவிட்டாய்’ என்ற பேச்சு வந்தது. அப்படியே அது, ‘நான் இந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற்புறுத்த முடியாது. திருமணம் முடிந்துவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

Advertisement

Advertisement

ஆனால், செய்துதான் ஆகவேண்டும். என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக. இன்றும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். அவர் நல்லவர். நானும் அப்படித்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், சில நேரங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்தப் பிரபஞ்சத்துக்கே பிடிக்காது என நினைக்கிறேன். எங்கள் மகனுக்கு முன்னுரிமை கொடுத்து அவனுக்குச் சிறந்தவற்றைக் கொடுப்போம். நாங்கள் இருவரும் சில இனிமையான வருடங்களைக் கழித்துள்ளோம். அந்த நினைவுகளை நாங்கள் மறக்க மாட்டோம். இனி இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம். என்று மனமுருக பேசியுள்ளார் .

Advertisement