விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் நடுவரும், நடிகருமான பாலாஜிக்கும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்திருந்தனர். மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக பாலாஜியும், விவாகரத்து வேண்டும் என நித்யாவும் கூறிவந்தனர்.
என்னையும் என் பொண்ணையும் ரூமுக்குள்ள அடைச்சு தீ வைச்சது சம்பந்தமா நான் மாதவரம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போனப்ப, அந்தப் புகாரை எடுக்க போலீஸ் தயங்கினாங்க. ஏன்னா அவங்களுக்கு இவரைப் பத்தி தெரிஞ்சிருக்கு. நான் எங்க கம்பிளையன்ட் கொடுக்க போனாலும் அந்த ஆளுங்களோட என்னை சம்பந்தப்படுத்தி பேசுற கீழ்த்தர புத்தி பாலாஜிக்கு உண்டு.
இப்ப அவர் சொல்ற ஆயிரம் விளக்கு ஸ்டேஷன் கிரைம் டிபார்ட்மென்ட் எஸ்.ஐ மனோஜ் குமாரும், நான் வழக்கமா போற ஜிம்மோட டிரெயினரும் பாலாஜிக்கு குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். பிரச்னைனு வந்தபிறகு என்ன பண்றதுனு தெரியாம, மனோஜ்குமாரையும், ஜிம் டிரெயினரையும் என்னோட இப்ப தொடர்புப்படுத்தி பேசுறார் பாலாஜி.
இப்ப ஃபேஸ்புக்ல வலம் வர்ற வீடியோவுல நடந்தது அத்தனையும் உண்மை. அதை பார்த்த பாலாஜி ரொம்ப டென்ஷனாகிட்டார். அவரோட வக்கீல் மூலமா என்னை மிரட்ட ஆரம்பிச்சுட்டார். ‘300 நாளில் உன்னை கோர்ட்டும் கேஸூமா அலையவெச்சு காட்டறேன்’னு அவரோட வக்கீல் என்கிட்ட சேலஞ்ச பண்ணாங்க. இப்ப திடீர்னு, ‘மியூச்சுவல் டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துடுறேன். ஆனால், உங்க குழந்தையை பாலாஜிகிட்ட கொடுத்துடுடணும்’னு சொல்றாங்க. விவாகரத்து கேஸ் ஃபைல் பண்ணின பிறகு ஏன் இப்படிச் சொல்றாங்க. என்னை எமோஷனலாக வீக் ஆக்கப் பார்க்கிறாங்க.
நீங்க வெளியிட்ட வீடியோ பார்க்க கண்றாவியா இருக்குது. அதை ஏன் வெளியிட்டு உங்க பொண்ணு லைஃபை கெடுக்குறீங்கனு பலரும் கேட்கிறாங்க. உண்மையில இந்த பிரச்னையினால என் பொண்ணு பாதிக்கப்படக்கூடாதுனு நான் நினைக்கிறேன். ஆனா அவர் அதைப் பத்தி கவலைப்படாம என்னைப் பத்தின வீடியோவை வெளியிடுவேன்னு மிரட்டுறதுனால, மக்களுக்கு அவரோட சுயரூபம் தெரியட்டும்னு நினைச்சுதான் அந்த வீடியோவை நான் வெளியிட்டேன்